திருச்சிக்கு கடத்தப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் பறிமுதல்


திருச்சிக்கு கடத்தப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் பறிமுதல்
x

திருச்சிக்கு கடத்தப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இவ்வாறு கடத்தப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு முறையில் சோதனைகள் நடத்தி, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பறிமுதல்

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டிங் எந்திரம் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.9 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான 159 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story