பிளஸ்-1 பொதுத்தோ்வில் அரியலூரில் 93.06 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ்-1 பொதுத்தோ்வில் அரியலூரில் 93.06 சதவீதம் பேர் தேர்ச்சி
x

பிளஸ்-1 பொதுத்தோ்வில் அரியலூரில் 93.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அரியலூர்

அரியலூர் 93.06 சதவீதம் தேர்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வினை 87 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 439 மாணவர்களும், 4 ஆயிரத்து 688 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 127 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 979 மாணவர்களும், 4 ஆயிரத்து 515 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 93.06 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 89.64 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 96.31 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

9-வது இடத்துக்கு முன்னேறிய அரியலூர்

கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் அரியலூர் மாவட்டம் 12-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது மாநில அளவில் 3 இடம் முன்னேறி அரியலூர் மாவட்டம் 9-வது இடத்தை பிடித்துள்ளதால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story