12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது


12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
x

குற்றாலம் கோவில் அருகே 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.

தென்காசி

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் அலுவலகத்தின் பின்புறத்தில் பாம்பு ஒன்று கிடப்பதாக அலுவலகத்தின் தலைமை கணக்கர் அழகு ராஜேஸ்வரி, தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ராஜநாகம் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்தனர். அந்த ராஜநாகம் 12 அடிக்கு மேல் இருந்தது. பின்னர் அதனை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப் பகுதியில் விட்டனர்.

1 More update

Next Story