காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் பலி

கோவையில் காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் பலியானார்.
சுந்தராபுரம்
கோவை சுந்தராபுரம் குறிச்சி ஆண்டாள் வீதியை சேர்ந்தவர் மனோவா. ஆட்டோ டிரைவர். இவருக்கு 12 வயதில் மகன் இருந்தான். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சிறுவன் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்தனர். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.
இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





