வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது.
நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஆளப்பெரியனூர் பகுதியை சேர்ந்தவர் கவி. இவரது வீட்டிற்குள் 5 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதனை கண்டதும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று சுமார் ½ மணி நேரம் போராடி 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து, திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





