ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x

வெங்கமேடு பகுதியில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

5 பவுன் சங்கிலி திருட்டு

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று கரூர் ரத்தினம் சாலையில் இருந்து வெங்கமேடு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அந்த பஸ் வெங்கமேடு புளியமரம் பஸ்நிறுத்தத்தில் நின்றது. அப்போது பழனியம்மாள் பஸ்சில் இருந்து இறங்கி கீழே வந்தார். பின்னர் பழனியம்மாள் தனது கழுத்தை பார்த்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கசங்கிலியை மர்மநபர் ஓடும் பஸ்சில் வைத்து திருடியது அவருக்கு தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து பழனியம்மாள் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, பெண்ணிடம் தங்கசங்கிலியை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story