நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு

அரக்கோணத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை மர்ம நபர் பறித்து சென்றான்.
அரக்கோணம் கணேஷ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வேலு. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமாதேவி (வயது 35). இவர் நேற்று இரவு கணேஷ் நகர் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கடையில் மாவு அரைத்துக் கொண்டு, வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் உமாதேவியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பிசென்று விட்டான். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





