6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது


6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது
x

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

கீரனூர் பாலகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அவர் கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் பதுங்கி இருந்து 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் சாரைப்பாம்பை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

1 More update

Next Story