கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பலி


கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பலி
x

தேசூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

தேசூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவன்

தேசூர் அருகே உள்ள சாத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி தீபா. மகன் விஷ்வா (வயது 7). மகள் காவியா (5). நேற்று ஏழுமலை மனைவியுடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இவர்களுடன் மகன் விஷ்வா, மகள் காவியா சென்றிருந்தனர். ஏழுமலையும் மனைவி தீபாவும் வேலை செய்து கொண்டிருந்தபோது மகன் விஷ்வா, மகள் காவியா அங்கு அமர்ந்து கொண்டிருந்தான்.

கிணற்றில் தவறி விழுந்தான்

இந்த நிலையில் தீபா மாடுகளை கட்டிவிட்டு திரும்பியபோது விஷ்வாவை காணவில்லை. காவியா மட்டும் அமர்ந்திருந்தாள். கிணற்றுப்பக்கம் சென்றதாக மகள் கூறவே அங்கு சென்று பார்த்தபோது விஷ்வா கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.

இதனால் ஏழுமலையும் அவரது மனைவியும் பதறினர். இது குறித்து தெள்ளார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஷ்வாவை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடிய நிலையில் விஷ்வாவை அவர்கள் பிணமாக மீட்டனர். உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

உடலை தேசூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story