தேனி அருகே கஞ்சா விற்றவர் சிக்கினார்

தேனி அருகே கஞ்சா விற்றவர் சிக்கினார்
தேனி அருகே கோடாங்கிபட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சிலம்பரசன் (வயது 33), அவரது தம்பி பிரதீப் (27) ஆகியோர் கஞ்சா பொட்டலம் போட்டு விற்பனை செய்தனர். போலீசாரை பார்த்ததும் பிரதீப் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், கஞ்சா விற்ற ரூ.36 ஆயிரத்து 200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





