சாலையோரம் நின்ற கார் தீப்பற்றி எரிந்தது


சாலையோரம் நின்ற கார் தீப்பற்றி எரிந்தது
x

நெல்லையில் சாலையோரம் நின்ற கார் தீப்பற்றி எரிந்தது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் ராகவன். பத்திர எழுத்தர். இவர் தனது காரை சம்பவத்தன்று ஆனந்தபுரம் சாலையில் நிறுத்தி இருந்தாா். அப்போது அருகில் கிடந்த குப்பையில் பிடித்த தீ பரவி, காரில் பற்றி எரிந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைந்தனர். இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story