சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து; காவலாளி படுகாயம்


சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து; காவலாளி படுகாயம்
x

சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் காவலாளி படுகாயம் அடைந்தார்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த கூளூர் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 57). இவர் காஞ்சிபாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பலராமன் பணிக்கு வந்தார்.பணி முடிந்து நேற்று காலை பலராமன் தனது சைக்கிளில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி வந்த சரக்கு வாகனம், முன்னால் சென்று கொண்டிருந்த பலராமனின் சைக்கிள் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து விரைந்து சென்ற கனகம்மாசத்திரம் போலீசார் படுகாயம் அடைந்த காவலாளி பலராமனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story