மனைவியை தாக்கிய வியாபாரி மீது வழக்கு

தேனியில் மனைவியை தாக்கிய வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி சமதர்மபுரத்தை சேர்ந்தவர் விஜயசாரதி (வயது 42). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி சவுமியாதேவி (38). இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. விஜயசாரதி மதுபோதையில் தனது மனைவியை அடிக்கடி தாக்கி கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயசாரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





