நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர் சாவு


நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர் சாவு
x

நண்பர்களுடன் குளித்தபோது தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர் இறந்தார்.

தர்மபுரி,

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் யோகேந்திரன் (வயது 18). இவர் சென்னை நந்தனம் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள நவலை கிராமத்தை சேர்ந்த அர்னால்டு (18) என்பவரும் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நண்பர்களான 2 பேரும் நேற்று நவலை கிராமத்துக்கு வந்தனர். பின்னர் அர்னால்டு, யோகேந்திரன் சில நண்பர்களுடன் கம்பைநல்லூர் அருகே பெரமாண்டப்பட்டியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது யோகேந்திரன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது. அந்தசமயம் அவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் இருந்த சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

விசாரணை

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் யோகேந்திரனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story