வெந்நீர் கொட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை சாவு


வெந்நீர் கொட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை சாவு
x

வெந்நீர் கொட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை இறந்தது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே வெந்நீர் கொட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது.

வெந்நீர் கொட்டியது

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கைக்காளான் குட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டி (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (24). இவர்களுடைய மகள் ரித்திகா (3).

கடந்த 5-ந் தேதி சத்யா குளிப்பதற்காக வீட்டுக்கு வெளியே பாத்திரத்தில் வெந்நீர் போட்டார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த ரித்திகா திடீரென பாத்திரத்தில் இருந்து வெந்நீரை எடுக்க முயன்றாள். இதில் எதிர்பாராதவிதமாக பாத்திரத்தில் இருந்த வெந்நீர்ரித்திகாக மீது கொட்டியது.

சாவு

இதனால் படுகாயம் அடைந்த அவள் வலியால் அலறி துடித்தாள். உடனே அவளை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சே்ாத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்ைச அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக ரித்திகா உயிரிழந்தாள்.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story