மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி தம்பதி பலி- சோழவந்தான் அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிளில் சென்றபோது   அரசு பஸ் மோதி தம்பதி பலி-  சோழவந்தான் அருகே பரிதாபம்
x

சோழவந்தான் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி தம்பதி பலியாகினர்.

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி தம்பதி பலியாகினர்.

அரசு பஸ் மோதியது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்புகுடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(வயது 39). இவரது மனைவி தீபா(32). இவர்கள் இருவரும் மதுரை சென்று பொருட்கள் வாங்கிவிட்டு நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். சோழவந்தான் அருகே நகரி நான்கு வழிச்சாலையில் சென்றபோது அவ்வழியாக பின்னால் மதுரையில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

தம்பதி பலி

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் வீராசாமி, தீபாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story