அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர் விடுமுறை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டணம் மற்றும் பொது தரிசனம் வழியில் அனுமதிக்கப்பட்டனர்.

நீண்ட வரிசை

பொது தரிசன வழியானது கோவிலின் ராஜகோபுரம் முன்பில் இருந்து தொடங்கியது. பக்தர்கள் கோவிலின் சுற்றுச்சுவர் அருகில் உள்ள தென் ஒத்தவாடை தெருவில் இருந்து நீண்ட வரிசையாக நின்று ராஜகோபுரம் வழியாக சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் சென்றனர்.

கடந்த ஓரிரு தினங்களாக திருவண்ணாமலையில் அவ்வபோது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று பகலில் வெயில் கொளுத்தியது.

4 மணி நேரத்திற்கு மேல்...

பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் நின்ற சில பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கையில் குடை பிடித்த படி நின்றனர்.

பொது தாிசனம் வழியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

சமீப நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆந்திர மாநில பக்தர்களின் எண்ணிக்கையே அதிகளவில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் கிரிவலமும் சென்றனர்.

அதுமட்டுமின்றி ஏராளமான பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை நகரில் சின்னக்கடை தெரு, தேரடி தெரு, திருமஞ்சன கோபுர வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Related Tags :
Next Story