அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது.

மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலை சுற்றி பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.


Next Story