செஞ்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி சாவு


செஞ்சி அருகே    கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி சாவு
x

செஞ்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள கீழ்பாப்பாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 53). மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர்களிடம் வயலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வயலுக்கு சென்று தயாளனை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சந்தேகத்தின்பேரில் அவருடைய குடும்பத்தினர் வயலில் உள்ள கிணற்றை பார்த்தனர். அப்போது தயாளன் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுபற்றி செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தயாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வயலுக்கு சென்ற தயாளன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





Next Story