பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய்


பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய்
x

கீரமங்கலத்தில் பூனைக்குட்டிக்கு நாய் பாலூட்டியது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரண்மனைக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவர் தனது வீட்டில் கால்நடைகள், நாய் மற்றும் பூனைகளை வளர்த்து வருகிறார். பொதுவாக நாயும், பூனையும் சண்டையிட்டு கொள்வது வழக்கம். ஆனால் துரைப்பாண்டியன் வீட்டில் வளரும் நாயும், 5 மாத பூனைக்குட்டியும் சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒன்றாகவே விளையாடி வந்தன. தற்போது 4 குட்டிகளை ஈன்றுள்ள நாய் தனது குட்டிகளுடன், பூனைக்குட்டிக்கும் பால் கொடுத்து வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்று வருகிறார்கள்.


Related Tags :
Next Story