மாடு முட்டியதில் விவசாயி பலி


மாடு முட்டியதில் விவசாயி பலி
x
தினத்தந்தி 25 Sep 2023 8:15 PM GMT (Updated: 25 Sep 2023 8:16 PM GMT)

கிணத்துக்கடவு அருகே மாடு முட்டியதில் விவசாயி உயிரிழந்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஓழலப்பதியை அடுத்த குப்பாண்டகவுண்டனூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 68). விவசாயி. இவருக்கு, கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்திேலயே கிருஷ்ணசாமி குடிசை அமைத்து வசித்து வந்தார். மேலும் கால்நடைகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணசாமி தனக்கு சொந்தமான ஒரு மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது திடீரென மாடு அவரை முட்டி தாக்கியது. இதில் வயிற்று பகுதியில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கிருஷ்ணசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story