சின்னமனூர் அருகே தலையில் காயத்துடன் பிணமாக கிடந்த விவசாயி


சின்னமனூர் அருகே தலையில் காயத்துடன் பிணமாக கிடந்த விவசாயி
x

சின்னமனூர் அருகே தலையில் காயத்துடன் பிணமாக கிடந்த விவசாயி சாவில் சந்தேகம் இருப்பதாக மகன் போலீசில் புகார் கொடுத்தார்

தேனி

சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 59). விவசாயி. இவரது மகன் பிரபாகரன் (38). இவர் திருமணம் முடிந்து குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பாஸ்கரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரபாகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அவர் வெள்ளையம்மாள்புரத்திற்கு வந்தார். பின்னர் தந்தையை உடலை பார்த்து அவர் கதறி அழுதார். அப்போது பாஸ்கரன் தலையில் ரத்தகாயம் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக பிரபாகரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story