வேட்டவலம் அருகே அரசு பஸ் மோதியதில் விவசாயி பலி


வேட்டவலம் அருகே அரசு பஸ் மோதியதில் விவசாயி பலி
x

வேட்டவலம் அருகே அரசு பஸ் மோதியதில் விவசாயி பலியானார்.

திருவண்ணாமலை

வேட்டவலம்

வேட்டவலம் அருகே அரசு பஸ் மோதியதில் விவசாயி பலியானார்.

வேட்டவலத்தை அடுத்த இலுப்பாந்தாங்கல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 57). விவசாயி. நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ஆவூர் கிராமத்திற்கு வந்து வசிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

கீழ்க்கரிப்பூர் கூட்ரோடு அருகே சென்றபோது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சின்னதுரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சின்னதுரை மகன் சிலம்பரசன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story