பெண்ணாடம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி சாவு


பெண்ணாடம் அருகே  மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 6 Sep 2023 6:45 PM GMT (Updated: 6 Sep 2023 6:46 PM GMT)

பெண்ணாடம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடலூர்

பெண்ணாடம்,

கடலூர்-அரியலூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள முல்லையூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 54), விவசாயி. சம்பவத்தன்று இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பொன்னேரி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் இறந்து போனார். இதுகுறித்து அவருடைய மகன் வசந்தகுமார் (24) பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story