அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி சாவு


அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி சாவு
x

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி சாவு.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டையை சேர்ந்தவர் சுப்ரமணியன்(வயது 63). விவசாயி. கடந்த சில தினங்களாக மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று காலை சுப்ரமணியன் தனது வயலில் தேங்கிய மழை நீரை வடிய வைப்பதற்காக வயலுக்கு சென்றார். அப்போது வயல் அருகே சென்ற மின்கம்பி சாலையில் அறுந்து கிடந்தது.

இதை கவனிக்காத சுப்ரமணியன் எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார். இதனால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

1 More update

Next Story