கோபாலபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் தீ விபத்தால் பரபரப்பு


கோபாலபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் தீ விபத்தால் பரபரப்பு
x

கோபாலபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை கோபாலபுரம் கான்ரான் சுமித் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரி கட்டிடம் மொத்தம் 4 மாடிகளை கொண்டது. ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் இருந்து நேற்று காலை திடீரென கரும்புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதுபற்றிய தகவலின் பேரில் விரைந்து வந்த மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் சிக்கியிருந்த 5 நோயாளிகளையும், ஊழியர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள நர்சுகள் ஓய்வெடுக்கும் அறையில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story