மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட கூட்டுறவு இணைபதிவாளர் நீலமேகம் தலைமை தாங்கினார்.

உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் வரவேற்றார். ஓய்வுபெற்ற மத்திய கூட்டுறவு வங்கி துணை மேலாளர் திருநாவுக்கரசு கலந்துகொண்டு 100 மாற்றுதிறனாளிகளுக்கு மளிகை பொருட்கள், அரிசி, வேட்டி, சேலை, கரும்பு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, நல்லாசிரியர்கள் துரைமணி, அப்பாசாமி, ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தில்லையப்பன், பேராசிரியர் கங்கதுரைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story