புழுதிவாக்கத்தில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு


புழுதிவாக்கத்தில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு
x

புழுதிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் புழுதிவாக்கம் மந்தைவெளி தெருவில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சென்னை

சென்னை புறநகர் பகுதியில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழையால் புழுதிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் புழுதிவாக்கம் மந்தைவெளி தெருவில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் மடிப்பாக்கத்தில் உள்ள போலீஸ் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் மாநகராட்சி கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன் தலைமையில் மாநகராட்சி குழுவும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

பள்ளிக்கரணை ராஜேஷ் நகரில் பலத்த மழையால் மழைநீர் தேங்கி இருந்தது. 6-வது தெருவில முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி இருந்ததால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். பள்ளிக்கரணை செட்டிநாடு அவென்யூ பகுதிகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி கவுன்சிலர் பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றினார்கள்.

கோவிலம்பாக்கம் பகுதியில் விழுந்த 15-க்கும் மேற்பட்ட மரங்களை ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிமாறன் தலைமையில் ஊழியர்கள் வெட்டி அகற்றினர்.


Next Story