பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 17 July 2023 7:00 PM GMT (Updated: 17 July 2023 7:00 PM GMT)

கடையநல்லூரில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி சுந்தரி (வயது 63). இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்காக மாவடிக்கால் ெரயில்வே தண்டவாளம் அருகே தங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, எதிரே முகத்தில் கைக்குட்டையை வைத்து மூடிவந்த மர்ம நபர் திடீரென மூதாட்டியின் வாயைப் மூடி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுந்தரி கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராகளில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Related Tags :
Next Story