பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

பழனியில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
பழனி ஆண்டவர் நகரை சேர்ந்தவர் தீபக்குமார். அவருடைய மனைவி வீரமணி (வயது 27). நேற்று முன்தினம் இவர், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்த சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி வீரமணியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்று விட்டார். இதுகுறித்து அவர், பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





