அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணியிடங்களில் புகார் குழு அமைக்க வேண்டும் தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்


அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில்  பணியிடங்களில் புகார் குழு அமைக்க வேண்டும்  தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியிடங்களில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியிடங்களில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புகார் குழு

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் அறிவுரையின்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் அரசுத் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி, சிறு, குறு நிறுவனங்கள், அமைப்பு சாரா பணியிடங்கள் மற்றும் பெரிய, சிறிய அளவிலான மளிகைக் கடைகள் முதலான அனைத்து பணியிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் (ஒரு பெண் பணியாளர் இருந்தாலும்) பணிபுரியும் பட்சத்தில் அங்கு ஒரு மாதகாலத்திற்குள் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்.

அபராதம்

நிறுவனங்கள் புகார் குழு அமைக்கப்பட்ட விவரத்தை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உள்ளக புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலும், சட்ட விதிமுறைகளை மீறினாலும் ரூ.50 ஆயிரம் அபாரதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story