உளுந்தூர்பேட்டையில் லாரி மோதி 2 மின்கம்பங்கள் முறிந்தது


உளுந்தூர்பேட்டையில்    லாரி மோதி 2 மின்கம்பங்கள் முறிந்தது
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

உளுந்தூர்பேட்டையில் லாரி மோதி 2 மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட முனுசாமி நகர் வழியாக நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென தெருவோரம் இருந்த 2 மின்கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதி நின்றது. இதில் 2 மின்கம்பங்களும் முறிந்து விழுந்தது. அப்போது ஒரு கம்பம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து விட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். மேலும் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்து முறிந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய கம்பங்களை நட்டு மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த விபத்தால் அங்கு சுமார் 6 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story