பாதுகாப்பு கேட்டு போலீசில் காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
x

பாதுகாப்பு கேட்டு போலீசில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

ஈரோடு

கடத்தூர்

கோவை மாவட்டம் மதுக்கரையை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 26). இவர் வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகிம். இவருடைய மகள் ஷெரின் பாத்திமா (21). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் 4-ம் ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். வினோத்குமாரின் வீடும், ஜெரின் பாத்திமாவின் வீடும் அருகருகே உள்ளது. இதனால் 2 பேரும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு 2 பேரும் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரின் குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story