அரசு பள்ளியில் மேஜிக் நிகழ்ச்சி


அரசு பள்ளியில் மேஜிக் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 March 2023 12:15 AM IST (Updated: 23 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் மேஜிக் நிகழ்ச்சி நடந்தது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

மாணவர்களின் திறன்களை முழுமையாக வளர்க்கும் வகையில் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாதந்தோறும் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து திறம்பட கேள் என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். இதன் 25-வது நிகழ்வாக பள்ளி வளாகத்தில் மேஷிக் ஷோ நடத்தப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஆசிரியர் மலர்கண்ணன் மேஜிக் ஷோவை நடத்தினார். பள்ளி மாணவ-மாணவிகள் முன் சுமார் 20 வகையான மேஜிக் நடத்தப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் குழந்தைகளின் மனதை உற்சாகப்படுத்தி, அவர்களை பள்ளிக்கு வரவைக்கும் என்று தமிழாசிரியர் பாலமுருகன் கூறினார்.

1 More update

Next Story