ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது


ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
x

ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளத்தை அடுத்த ஏரி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் நேற்று விடியற்காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த, விவசாயி அண்ணாமலை (வயது 54) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அண்ணாமலை அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி ஒன்றை பதுக்கி வைத்திருந்ததும், நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டிற்காக மருந்து பொருட்களை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த வனத்துறையினர் அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story