4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது

4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
விஜயநாராயணம் பாப்பான்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 48). இவரை கடந்த 2007-ம் ஆண்டு அடிதடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் விஜயநாராயணம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் அவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் விஜயநாராயணம் போலீசார் மாடசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





