1½ ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

1½ ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு அழகப்பப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த 1½ ஆண்டுகளாக கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனால் அவருக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த ரமேசை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





