ரூ.6 கோடியில் கோவில் நிலத்தில் நவீன திருமண மண்டபம்


ரூ.6 கோடியில் கோவில் நிலத்தில் நவீன திருமண மண்டபம்
x

ராஜபாளையத்தில் ரூ.6 கோடியில் கோவில் நிலத்தில் நவீன திருமண மண்டபம் அமைக்கப்பட உள்ளதாக தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் ரூ.6 கோடியில் கோவில் நிலத்தில் நவீன திருமண மண்டபம் அமைக்கப்பட உள்ளதாக தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருமண மண்டபம்

ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோவில் நிலத்தில் ஏழை, எளிய மக்கள் தங்களது வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் திருமண மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை மதுரை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் மண்டபம் அமைக்கும் இடத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை, எளிய மக்கள் தங்களது வீட்டு சுபநிகழ்ச்சிகளை கொண்டாட தனியார் திருமண மண்டபங்களுக்கு இணையாக குளிர்சாதன வசதியுடன் கோவில் நிலத்தில் ரூ.6 கோடியில் நவீன திருமண மண்டபம் அமைக்கப்படும்.

வரைபடம்

இந்த மண்டபம் விருதுநகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்ட கலந்துரையாடல் அரங்கம் போல் ஆயிரம் நபர்கள் அமரும் வகையில் அமைக்கப்படும்.

விரைவில் திருமண மண்டபம் அமைக்க வரைபடம் மற்றும் மதிப்பீடு தயார் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கோவில் செயல் அலுவலர் ராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story