ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் திறப்பு


ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் திறப்பு
x
தினத்தந்தி 28 Aug 2023 12:30 AM IST (Updated: 28 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்து ஏ.டி.காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.

நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் வி.கே.கணபதி, எஸ்.ராதா, பஞ்சாயத்து தலைவர் ஆ.செல்லப்பா, துணைத்தலைவர் ஒளிவுலெட்சுமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story