கிணற்றில் தவறி விழுந்து வடமாநில ஊழியர் பலி


கிணற்றில் தவறி விழுந்து வடமாநில ஊழியர் பலி
x

செல்போன் பேசி கொண்டு சென்றதால் கிணற்றில் தவறி விழுந்து வடமாநில ஊழியர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர்

வடமாநில ஊழியர்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் புதுதகல் (வயது 28). இவர் கரூர் சுக்காலியூர் அருகே உள்ள காந்திநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு புதுதகல் சிலருடன் சேர்ந்து அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். இதில் சிலர் அங்கேயே படுத்து தூங்கி விட்டனர். புதுதகல் தனது செல்போனை எடுத்து பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு நேரம் என்பதால் அங்குகிணறு இருந்தது தெரியாமல் புதுதகல் தவறி விழுந்தார்.

பலி

இதனையடுத்து அவருடன் இருந்தவர்கள், புதுதகலை அப்பகுதியில் தேடினர். அப்போது, அவர் அங்கிருந்த தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் புதுதகலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story