வாடிப்பட்டி அருகே பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற நர்சு


வாடிப்பட்டி அருகே பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற நர்சு
x

பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த நர்சை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

வாடிப்பட்டி

பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த நர்சை போலீசார் கைது செய்தனர்.

ஆண் குழந்தை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(வயது 39). எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா(28). தனியார் மருத்துவமனையில் நர்சாக உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த 1 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தது. உடனே அந்த குழந்தையை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்தது.

கைது

கழுத்தை அறுத்ததால் குழந்தை இறந்து இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் கூறியதால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தைைய கழுத்தை அறுத்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.

மேலும் குழந்தைக்கு அக்கி நோய் வந்து கடந்த 3 நாட்களாக அவதிப்பட்டு தொடர்ந்து அழுது வந்தது. இதனால் மனவேதனை அடைந்து குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவிதாவை கைது செய்தனர்.


Next Story