ஓடும் ரெயிலில் படியில் நின்று பயணம் செய்தவர் தவறி விழுந்து சாவு


ஓடும் ரெயிலில் படியில் நின்று பயணம் செய்தவர் தவறி விழுந்து சாவு
x

ஓடும் ரெயிலில் படியில் நின்று பயம் செய்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றபடி வந்துள்ளார். அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ரெயில் நிலைய பகுதியில் வந்த போது அந்த நபர் திடீரென பெட்டியில் இருந்து தவறி தண்டவாள பகுதியில் விழுந்துள்ளார். அப்போது அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி எதிர் திசையில் சென்ற ரெயில் அந்த நபரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story