6 மாநிலங்கள் வழியாக செல்லும் யாத்திரை


6 மாநிலங்கள் வழியாக செல்லும் யாத்திரை
x

அமைதி, சகோதரத்துவத்தை வலியுறுத்தி 6 மாநிலங்கள் வழியாக செல்லும் யாத்திரைக்கு வேலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேலூர்

உலகில் அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமாதானத்தை வலியுறுத்தி கேரளாவில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி அசோக அம்பேத்கர் தம்ம யாத்திரை என்ற ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரதத்தில் அசோகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்கள் வழியாக வருகிற 21-ந் தேதி மராட்டியத்தில் நிறைவடைகிறது.

இந்த ரத யாத்திரை வாகனம் நேற்று வேலூர் வந்தடைந்தது, சத்துவாச்சாரி அம்பேத்கர் சிலை அருகே யாத்திரை குழுவினரை பொதுமக்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் வரவேற்று வாகனத்தில் இருந்த அசோகரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் புத்த மத துறவிகள் கடவுள் வாழ்த்து பாடி பிரார்த்தனை செய்து பொதுமக்கள் அனைவரும், அனைவரிடமும் சகோதரத்துவத்துடனும், அமைதியுடனும் வாழ வேண்டும் என அறிவுரை வழங்கினர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசோகரின் படம் மற்றும் அவரது வரலாறு குறித்த பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


Next Story