நீர்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுகோள்


நீர்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:52 PM GMT (Updated: 17 Jun 2023 5:53 AM GMT)

நீர்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் போதும், குளிக்கும் போதும் எதிர்பாராத விதமாக தவறி நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், நீர் நிலைகளை போதுமான பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். எவரேனும் நீர்நிலைகளில் தவறி விழுந்துவிட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், மருத்துவ அவசர ஊர்திக்கும் தெரிவிக்க வேண்டும், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story