பிளஸ்-2 மாணவர் கொலை


பிளஸ்-2 மாணவர் கொலை
x

பிளஸ்-2 மாணவர் கொலை

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

சரவணம்பட்டியில் பிளஸ்-2 மாணவர் கொலை செய்யப் பட்டார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவர்

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கஞ்சா போதையில் இருந்த மாணவர் தனது பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்தின் முன்பு படுத்திருந்தார். இதனை கண்ட அவரது நண்பர்கள் சிலர், அவரை எழுந்து வீட்டுக்கு செல்லுமாறு வற்புறுத்தி உள்ளனர்.

ஆனால் போதையில் இருந்த மாணவர், அவர்களின் பேச்சை கேட்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அவரது நண்பர்கள் அவரை கைகளால் தாக்கி உள்ளனர். இந்த நிலையில் போதையில் இருந்த மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

கொலை

இதைத் தொடர்ந்து சக மாணவர்கள் அவரை மீட்டு, சரவணம் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இது பற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவர் இறந்தது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரை தாக்கிய நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story