பாத்திர வியாபாரி தற்கொலை


பாத்திர வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2023 1:15 AM IST (Updated: 19 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பாத்திர வியாபாரி தற்கொலை

கோயம்புத்தூர்

கணபதி

கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்தவர் தங்ககிருஷ்ணன்(வயது 58). இவர் தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் பாலமுருகன்.

இந்த நிலையில் பாலமுருகன் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை தங்ககிருஷ்ணன் எடுத்து செலவு செய்துவிட்டதாக தெரிகிறது. இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தங்ககிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story