லாரி மோதி முறிந்து விழுந்த மின் கம்பம்

லாரி மோதி முறிந்து விழுந்த மின் கம்பம்
ராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு பெரம்பலூரில் இருந்து முருகன் என்பவர் இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலைக்கு பஞ்சு ஏற்றி வந்துள்ளார். ராஜபாளையம் அருகே அழகை நகர் பகுதி வழியாக செல்லும்போது மின் வயர்கள் மற்றும் மின் கம்பம் மீது லாரி மோதியது.
இதில் மின்கம்பம் ஒடிந்து வாகனத்தின் மேல் தொங்கியது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் மின் கம்பத்தினை அகற்றி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





