ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது


ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
x

இலுப்பூர் அருகே ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது/

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டி ஆலிக்காடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவரது மனைவி சித்ரா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு இலுப்பூரில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் சித்ராவை ஏற்றிக்கொண்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றது. ஆனால் செல்லும் வழியில் சித்ராவுக்கு பிரசவவலி அதிகரித்தது. இதனால் நிலைமையை உணர்ந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சித்ராவுக்கு ஆழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் இலுப்பூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தக்க நேரத்தில், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story