எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடும் நிகழ்ச்சி


எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடும் நிகழ்ச்சி
x

எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே குளத்துப்பாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் கற்றலைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் உடல், உள்ளம், அறிவு சார்ந்த வளர்ச்சி இத்திட்டத்தில் உள்ளது என்பதையும், மாணவர்கள் ஆடல், பாடல், கதை நடிப்பு மூலம் கற்பதை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நடைபெற்றது. மாணவர்கள் என் மேடை என் பேச்சு என்ற தலைப்பில் பேசினார்கள். பெற்றோர்கள் கலந்து கொண்டு எண்ணும் எழுத்தும் பேனரில் கையெழுத்து இட்டனர். விளையாட்டுகளில் 3 ஸ்டார் பெற்றவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டது. இதில், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story