ஏரியில் மீனுக்கு வீசிய வலையில் சிக்கிய மலைப்பாம்பு



ஏரியில் மீனுக்கு வீசிய வலையில் மலைப்பாம்பு சிக்கியது.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று இளைஞர்கள் சிலர் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனுக்கு வீசிய வலையில் சுமார் 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த மலைப்பாம்பை உயிருடன் வெளியே கொண்டு வந்த இளைஞர்கள் அதனை அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire